செவ்வாய், 17 செப்டம்பர், 2013


எனது இறை வழிபாட்டு  நிலை..... ......

வணக்கம். 
எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான்.
ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் உண்டு. கும்பிடும் வேளை ஒரு மன அமைதி கிடைத்தாலும், நீ பெறுவது ஒரு போலிப் பாதுகாப்பு உணர்வுதான் என்று எனது தர்க்க மனது விழித்துக்கொள்ளும்.எனது உறவினர்களின், தெரிந்தவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாக அவதானித்த வரை அவர்கள் மலைபோல் சந்தித்த துன்பங்களை எல்லாம் கடவுள் நம்பிக்கை கொண்டு இலகுவாக கடந்துவந்திருப்பதனை அறிவதனால் கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற இரு முனைவுகளுக்கு அப்பால் இறை நம்பிக்கை தனிமனிதனைப் பொறுத்தவரை பயனுடையது என்றே எண்ணுகின்றேன்.
இக்காரணத்தால் நான் கடவுள் நம்பிக்கையாளர்களிடம் எனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக பிரச்சாரம் செய்வது கிடையாது. யாராவது என்னை நீங்கள் நாத்திகனா என்று வினவும்போது அவர்களுக்குத் தக்கபடி “நான் அப்படிச் சொன்னேனா?” என்றோ அல்லது “அது நீங்கள் எவ்வாறு கடவுளை வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது” என்றோ கூறி நழுவிவிடுவேன்.
நான் என்னை ஒரு இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்த விரும்பாமைக்கு அது என்னை எனது மரபில் இருந்து துண்டித்து விடுகின்றதோ என்ற எச்சரிக்கை உணர்வும் இன்னுமொரு முக்கியகாரணம்.
சைவ சித்தாந்தம் போன்ற தத்துவச்சாதனைகளையும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற பக்தி இலக்கியங்களையும், பண்ணிசையில் இருந்து வளர்ந்த கர்நாடக சங்கீத்தையும், இன்றும் ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிநிற்கும் கோயில் ஒவியங்களையும், அற்புதமான சிற்பங்களையும், கட்டிடப் பொறியியலின் சாதனைகளாக நின்றுகொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களையும் மேலை நாட்டவர்களுக்கு சில நூறாண்டுகளுக்கு முன்பே ஆயிரம்,ஆயிரம் மைல்களைக் கடந்து கடற்படை அனுப்பி வெற்றிபெற்ற ராஜராஜன்,ராஜேந்திரன் போன்ற பெருமன்னர்களில் இருந்து இறை நம்பிக்கையாளர்களான எனது எளிய உறவினர்கள் வரையிலானவர்களையும் கொண்ட எனது மரபை மறுத்து ஒரு பண்பாட்டு சுடுகாட்டிலும் நான்தான் புத்திசாலி என்ற ஆங்காரத்தின் உச்சியிலும் நாத்திகவாதி என்ற அடையாளம் என்னை கொண்டுபோய் சேர்த்துவிடுமோ என்ற அச்சம் எனக்குண்டு.
ஆயினும் எனது அடிப்படையான இயல்பின்படி நான் மதநம்பிக்கையை ஏற்றுக்கொண்டவனும் கிடையாது. சமூகத்தில் எமக்கு இனம் சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடையாளங்கள் அமைந்துவிடுகின்றன.ஆனால் நாம் எம்மை எப்படி அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது என்று நினைக்கிறேன். என்னை எப்போதும் தமிழன் என்று மட்டுமே அடையாளப்படுத்தி வந்துள்ளேன்.
ஆனால் எவராலோ குறிப்பாக எனது மத அடையாளம் கேட்கப்படும்போது பதில் அளிப்பது சிக்கலாகிவிடுகின்றது.இறைமறுப்பாளன் என்று அடையாளப்படுத்தவும் விரும்பவில்லை. அதேவேளை நெறி சார்ந்து இந்து என்றோ துறை சார்ந்து சைவம் என்றோ அடையாளப்படுத்துவது மேலதிக விளக்கங்கள் அளிக்கப்படாதவிடத்து பின்பற்றும் ஒருவர் என்ற போலி அடையாளத்தை தோற்றுவிப்பதாகிவிடுகின்றது.

தெளிந்த சிந்தனை உடய  யாரேனும் விளக்கம் கொடுத்தால் மகிழ்வுருவேன் .

நன்றி -

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அக மாற்றம் ! -- குற்றாலத்தில் விழிப்பு PART 1

அக மாற்றம் ! குற்றாலத்தில் விழிப்பு

ஒரு மனிதனின் மன மாற்றத்திற்கு புறத்தில் பெரிய பிரளயம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை .

குற்றாலம் , என்னை ,என் வழியை திசை திருப்பியது என்று   சொல்லலாம் .
மன திடம் ,பற்று , வழி நடத்தல்,ஒழுக்கம்  ஆகிவைகளை தெரிய படுத்தியது.

உச்சி நோக்கி...


சரி அது என்ன மாற்றம் ..முன்பு நான் எப்படி? ..(பயம் வேண்டாம் சுருங்க சொல்கிறேன்).சராசரிக்கும் கொஞ்சம் மாற்று  கருத்துள்ளவன்.
அதாங்க !அதே  தான் !..தேய்ந்த சொல்லில் ஓட்டாதவன் (அட அட்வைஸ் பண்ணா அலறுவோர் சங்கம் ).
நம்மில் ஒருவனுக்குள் உள்ள அதே பிடிவாதம் , மத  நம்பிக்கையில் முரண்பாடு (அதாங்க காலையில் பெரியார் மாதிரி பேசிட்டு சாயங்காலம்  சிவன் கோவிலில் விபூதிய  வாங்கி  நல்லா  நெற்றியில நல்ல பெருசா போட்டுகிறது )


போதும்ல.. விஷயத்துக்கு வருவோம் .அதற்க்கு முன் ,இனி நான் சொல்ல போகும் விசயங்கள்  உங்களை  ஆன்மிக பாதையில்  அழைத்து  செல்ல அல்ல ....மனதை  திரிய வைப்பது என் வேலை ! உரு கொடுப்பது கண்டிப்பாக உங்கள் மனதின் வேலை .

                                                                                     அகநிலை...அலையும் (1)






சனி, 6 ஜூலை, 2013

பட்டாம்பூச்சி - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ---படிக்க வேண்டிய நாவல்

பட்டாம்பூச்சி (Paipilon)
பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் பாபிலான், மூலம் : ப்ரென்ச்)
ஹென்றி ஷாரிய‌ர் என்னும் ப்ரென்ச்கார‌ரின் சுயசரிதை.
செய்யாத‌ ஒரு கொலைக்காக‌ ஆயுள் த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்டு,
ஃப்ரென்ச் க‌ய‌னாவிற்க்கு (S.America) நாடுக‌ட‌த்த‌ப்ப‌ட்டு சிறைவைக்க‌ப்பட்டார்
(1930க‌ளில்). அநியாயம‌னா த‌ண்ட‌னையை எதிர்த்து மீண்டும் மீண்டும் சுமார்
12 த‌ட‌வை த‌ப்பி, ஒவ்வொரு முறையும் பிடிப‌டுகிறார்.
ஒரு சிறு ப‌ட‌கில் 1000 மைல்க‌ள் க‌ட‌லை க‌ட‌ந்து டிரினிடாடை ஒரு முறை
அடைந்து சாத‌னை ப‌டைத்தார். சுமார் 6 மாத‌கால‌ம் செவ்விந்திய‌ர்க‌ள‌ட‌ன்
வ‌சித்தார் ; அங்கு ம‌ன‌ம் புரிந்தார். த‌ம்மை ச‌தி செய்து சிறையில் ..
அடைத்த‌ க‌ய‌வ‌ர்க‌ளை ப‌ழி வாங்க‌ துடித்தார். மீன்டும் ஃப்ரான்ஸ் செல்ல‌
முய‌ல்கையில் பிடிப‌ட்டு 4 ஆண்டு த‌னிமைச் சிறை த‌ண்ட‌னை.
த‌னிமை சிறை இருப்ப‌திலேயே கொடுமையான‌து. நிச‌ப்த‌ம் ம‌ட்டுமே.
ப‌ல‌ருக்கும் பைத்திய‌ம் பிடிக்கும். அதையும் வென்ற‌ க‌தை அருமை.
மீண்டும் மீன்டும் த‌ப்ப‌ முய‌ற்ச்சி. ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், எதிரிக‌ள்,
துரோக‌ங்க‌ள், ந‌ம்பிக்கைக‌ள். ம‌ர‌ண‌ங்க‌ள், சிறை க‌ல‌க‌ங்க‌ள்...
க‌டைசியாக‌ டெவில்ஸ் தீவில் சிறை. கொப்ப‌ரை தேங்க‌யா நிர‌ம்பிய‌ சாக்க்கு
மூட்டை பை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதி
வெற்றி. மொத்தம் 14 ஆண்டுகள் சிறைவாசம்.
தமிழில், ரா.கி.ரங்கராஜன் மொழி பெயர்த்து தொடராக 1970களில் வந்தது.
ஆனாலும் ஆங்கில / ப்ரென்ச் வடிவங்களே புத்தகமாக உள்ளன.
1971இல் இது வெளியாகி ஃப்ரான்ஸையே கலக்கியது.
ஒரு திரை படமாகவும் உருவானது.
வாழ்க்கையில் வைராக்கியத்தையும், நம்பிக்கையும்
உருவாக்கும்ஒரு காவியது இது. மீண்டும் மீண்டும் அடிக்கடி படிக்க தூண்டும்
வராலாறு இது.
-------------------------------------

inidhe thodangu...

வணக்கம் ! 

நான் சுவாமிநாதன் , வலைக்கு புதிது ! 

எழுதுவதற்கு தெரியவில்லை ,கண்டிப்பாக முயற்சியும் பயிற்சியும் செய்வேன்,செய்துகொண்டு இருகின்றேன் ,,,,,,,,,,,,,